தனிக்குடித்தனம் – மஞ்சுளா ரமேஷ்

கைவிரல்கள் வேகமாக பூக்களைத் தொடுத்துக் கொண்டிருக்க, அதைவிட வேகமாக வார்த்தைகளை விடுத்துக் கொண்டிருந்தாள் வடிவு தன் கணவனிடம்.

“பொண்ணை பார்த்தோமா? பேசினோமோன்னு இல்லாம, தனியா மணிக்கணக்குல போய் பேசறதுக்கு என்னதான் இருக்குமோ தெரியல? இந்த மாதிரி அநியாயத்தை நான் பார்ததேயில்ல”

எதிரே ஊஞ்சலில் அமர்ந்திருந்த மயில்சாமி, மனைவியை கடிந்தார்.

Continue reading “தனிக்குடித்தனம் – மஞ்சுளா ரமேஷ்”

நினைவுகள் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

2ஏ பூந்தோட்டம் செல்லும் டவுன் பஸ் வந்து நின்றது.

பஸ்ஸின் பின்புறம் வழியாக மீன் கூடைகள் எல்லாம் இறக்கியபின் பூபதியும் கீழே இறங்க, பாபு தன் லோடு சைக்கிளை அருகே கொண்டு வந்தான்.

மீன் கூடையை ஏற்றி வைத்து சைக்கிளை பாபு தள்ள, பூபதி கூடையைப் பிடித்துக் கொண்டதும் இருவரும் நடந்தனர்.

கடைத்தெருவில் தூங்குமூஞ்சி மரத்தடி வந்ததும் பூபதி மீன் கூடையை இறக்கி வைத்த போது ஊரிலிருந்த பெரியவீட்டுப் பெண்கள் சுற்றி வளைத்தனர்.

பாபு சைக்கிளை ஸ்டாண்ட் செய்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

Continue reading “நினைவுகள் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்

பிற்பகல் மூன்று மணி அளவில் செஷனுக்குள் நுழைந்த பிரபாகரிடம் சேகர் கேட்டான்.

“என்ன பிரபாகர், அரைநாள் லீவு எடுத்திட்டு இவ்வளவு லேட்டாய் ஆபிசுக்கு வர்றே?”

Continue reading “பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்”

எரிமலையாகுமோ அனிச்சம்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை மணி ஒன்பதரை.

இரண்டாவது டோஸ் காபிக்காக அடுப்பில் பாலை வைத்துவிட்டு, டபரா டம்ளரை எடுத்து சமையல் மேடையில் வைத்துவிட்டு, ஜீனி டப்பாவை கப்போர்டிலிருந்து எடுக்க முயன்ற சாவித்ரி மாமியின் அறுபத்தைந்து வயது உடல் தடுமாறியது.

தலை சுற்றுவதுபோல் இருந்தது. அழுதழுது ‘தலை’ வலிக்க வேறு செய்தது. எல்லாம் காலையில் கணவர் சாம்பசிவம் அறைந்த அறையாலும் அடித்த அடியாலும் விளைந்தவை.

இருபத்தைந்து வயதில் வாங்க ஆரம்பித்த அறையும் அடியும் இந்த அறுபத்தைந்து வயதிலும் மருமகள், மாப்பிள்ளை வந்தும் பேரன், பேத்திகள் எடுத்தும் இன்னும் நின்றபாடில்லை.

Continue reading “எரிமலையாகுமோ அனிச்சம்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

கடமை – கதை

கடமை - கதை

“என்னடா, சேத்தான் நம்ம பொழப்பு இப்படியே போய்கிட்டு இருக்குது. ஒரு பொழப்பையும் காணும். காலையில எந்திரிச்சு கடை தெரு பக்கம் வந்தா ஒரு பயலும் ஒரு பொழப்பும் தர மாட்டேன்றானுங்க.” என்று கேட்டான் பாபு.

Continue reading “கடமை – கதை”