கார சட்னி செய்வது எப்படி?

Kara Chutney

தேவையான பொருட்கள்

உரித்த வெங்காயம் : 4
வத்தல் : தேவையான அளவு
நல்லெண்ணெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு

 

செய்முறை

வெங்காயம், வற்றல், உப்பு சேர்த்து அரைத்து இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து எண்ணெயில் ஊற்றி நன்றாகக் கொதித்து கெட்டியாக வந்தவுடன் எண்ணெய்ப் பிரியவும் இறக்கவும்.சுவையான கார சட்னி தயார்.

 

சுசியம் செய்வது எப்படி?

Susiyam

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு : 500 மி.லி.
ஏலக்காய் : 5
உளுந்தம்பருப்பு : 125 மி.லி.
பச்சரிசி : 500 மி.லி. (மேல் மாவிற்கு)
வெல்லம் : 100 கிராம்
தேங்காய் : 1

 

செய்முறை

கடலைப்பருப்பை அரை வேக்காட்டில் அவித்து தண்ணீரை வடிகட்டி, வெல்லம், ஏலக்காய் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக ஆட்டி எடுத்து, தேங்காய்பூவையும் போட்டுக் கலந்து உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.

பின் பச்சரிசியையும், உளுந்து பருப்பையும் ஒன்றாக நனைய வைத்து அரை உப்புப் போட்டு பஜ்ஜிக்கு அரைப்பது போல் மாவாக ஆட்டி வைக்க வேண்டும்.

கடலைப்பருப்பு உருண்டைகளை மாவில் முக்கி தேங்காய் எண்ணெயை வாணலியில் காய வைத்து சுடவும்.சுவையான சுசியம் தயார்.

 

உருளைக் கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி?

Potato Chips

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு : 250 கிராம்
மிளகாய் தூள் : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு

 

செய்முறை

உருளைக்கிழங்கை நன்றாக கழுவ வேண்டும். வட்ட வடிவமாக செதிக்கிக் கொள்ளவும். பின் சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவி வெள்ளைத் துணி மீது ஒவ்வொன்றாக பரப்ப வேண்டும். அப்போழுது உருளைக் கிழங்கில் உள்ள ஈரப்பசையை துணி உறிந்து விடும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடேறிய பின் எண்ணெயை ஊற்றி வட்ட வடிவமாக உள்ள உருளைக்கிழங்கை போட்டு பொன் நிறம் சிவந்தவுடன் அரிகரண்டியால் அரித்து எடுக்கவும். சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.

ஒரு தட்டில் வைத்து மிளகாய்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கின் மீது தூவி பின்னர் காற்று புகாத ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

 

திறந்த வைத்தால் மொரு மொருப்பு இராது. மாலைப் பொழுதில் தீனியாகவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

 

பட்டாணி சுண்டல் செய்வது எப்படி?

Pattani Sundal

தேவையான பொருட்கள்

காய்ந்த பட்டாணி : 3 கப்
கடுகு : 2 டீஸ்பூன்
பெருங்காயம் : 2 சிட்டிகை
கறிவேப்பிலை : சிறிதளவு
மிளகாய் வற்றல் : 6
தேங்காய்பூ : ¼ மூடி
உப்பு : தேவையானது
எண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை

பட்டாணியை முதல்நாள் இரவே ஊறப் போடவும். மறுநாள் சுத்தமாக கழுவி, அதிகம் தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அதில் வெந்த பட்டாணியை கொட்டி தேவையான உப்பு போட்டுக் கிளறவும். பெருங்காயம் தூவவும். கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான பட்டாணி சுண்டல் தயார்.