கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 1

வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் திரைப்படப் பாடல்களுக்குத் தேசிய விருது என்று உச்சத்தில் நிறுத்தியவர்.

மனித வாழ்க்கையின் குறியீடுகள் என்றால் நிலம், மொழி, பண்பாடு, பராம்பரியம் என்று கூறலாம்.

மாற்றம் என்பது காலத்தின் கையிலிருந்து மனிதர் வாழ்க்கையில் குழைந்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தமிழ்த்திரை இசையில் பாடல் எழுத எத்தனையோ பேர் வந்தார்கள்; சென்றார்கள்; முத்திரை பதித்தவர் சிலர்.

Continue reading “கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 1”

பயனுள்ள திரட்டியானத் தமிழ்த்தொகுப்புகள்

தமிழ்த்தொகுப்புகள்

தமிழை ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கவும், நுணுகிப் பார்க்கவும், தமிழில் கிடைக்கும் படைப்புகளின் தொகுப்பாக அமைந்திருக்கின்ற தளம் ”தமிழ்த் தொகுப்பு” எனும் தளமாகும்.

தமிழ்இலக்கியத்தின் செழுமையான படைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கபட்டுள்ள இந்த வலைப்பக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுரைகள் என்று விரிவான பகுப்பு முறை இதன் தனிச்சிறப்பு.

Continue reading “பயனுள்ள திரட்டியானத் தமிழ்த்தொகுப்புகள்”

கவிஞர் வாலி

கவிஞர் வாலி

காவிரிக் கரையில் பிறந்த காவியக் கவிஞர் வாலி பற்றி நாம் இந்த வாரம் காண்போம். கவிஞர் வாலி ஓவிய வாலியாய் தான் முதலில் வலம் வந்தார். பின்பு காவிய வாலியாய் அவதாரம் எடுத்தார்.

தமிழ் சினிமாவில் 1958-ல் முதன் முதலில் தெலுங்கு இசையமைப்பாளரான கோபாலம் என்பவரின் இசையில், மைசூர் இராஜ பரம்பரையைச் சார்ந்த ஏகாம்பர ராசன் என்பவரின் தயாரிப்பில் உருவான, ‘அழகர்மலைக் கள்வன்‘ என்ற தமிழ் திரைப்படத்தில் திரைப்படப் பாடலாசிரியராக வாலி அறிமுகமானார்.

Continue reading “கவிஞர் வாலி”

விரிந்த தளம் கொண்ட வலம்

வலம்

மாத இதழாக வெளிவரும் வலம் இதழின் பொறுப்பாசிரியர்களாக அரவிந்தன், நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா ஆகியோர் உள்ளனர்.

80 பக்கங்களுடன் கருப்பு ‍வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவருகிறது.

வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கிறது.

சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்குவதை நாம் காணலாம்.

Continue reading “விரிந்த தளம் கொண்ட வலம்”

தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்

தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்

உலகத்திலுள்ள மொழிகளில் எல்லாம் பழமையான மொழி நம் தமிழ்மொழி என்று பலரும் கண்டறிந்து கூறியிருக்கின்றனர். ஓலைச்சுவடி முதல் கணிப்பொறியின் இணையம் வரை தமிழ் தன் தடத்தைப் பதிக்கிறது.

காலத்திற்கு ஏற்ப மொழி தன்னைப் புதுப்பிக்கிறது. அந்தப் புதுமையைப் புகுத்துபவர்கள்தான் கவிஞர்கள். இசைத்தமிழ், இயல்தமிழ், நாடகத்தமிழ் என்று பெரும் பிரிவுகளாக தமிழைப் பிரித்துள்ளனர்.

Continue reading “தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்”