விலகாத கண்கள் – கவிதை

சிகப்பு உடையணிந்து

மிடுக்கு மாறாமல்

பணிக்குக் கிளம்பினான்

பாதி வயிற்றோடு!

அழைப்பு வந்தவுடன்

ஆர்வமாய் எடுத்து

சோத்துப் பொட்டலங்கள்

வகைக்கு ஒன்றாய் வாங்கி அடுக்கினான்…

Continue reading “விலகாத கண்கள் – கவிதை”

வாய்ப்பந்தல் – சிறுகதை

வாய்ப்பந்தல்

அமைச்சர் வருகையையொட்டி மருதமுத்து குழுவினர் அலங்காரப் பந்தல் அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். உணவு இடைவெளியின்போது, மருதமுத்துவிடம் தம்பிதுரை மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

“அண்ணே, தப்பா நினைக்கலேன்னா உங்ககிட்ட ஒருவிஷயம் கேக்கலாமா?” என்றதும், “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு..?” என்றார் மருதமுத்து.

Continue reading “வாய்ப்பந்தல் – சிறுகதை”

மீனவனின் குமுறல் – கவிதை

கடலில் செத்துப் போகும்
மீனவனுக்காகவும்
கரையில் தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
மீனவனுக்காகவும்
குரல் கொடுக்கும் ஒரு
மீனவனின் குமுறல் இது…

இராவணன் ஆண்ட
இலங்காபுரியே!
இப்போதைய இலங்கையே!

Continue reading “மீனவனின் குமுறல் – கவிதை”