கோதுமை இன்றைக்கு உலக மக்களின் முக்கிய உணவுப் பொருளாகும். இது உலகில் அதிகம் பயிர் செய்யப்படும் பயிர்களில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. Continue reading “கோதுமை – மனிதனுக்கான தாவரப் புரதம்”
கொண்டைக்கடலை – புரதம் கொழிக்கும் கடவுளின் உணவு
கொண்டைக்கடலை நம் நாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் உணவுப் பொருள். பெரும்பாலும் எல்லா கடவுளர்களின் வழிபாட்டிலும் இது படையலாகப் படைக்கப்படுகிறது.
இது பசியைப் போக்கி ஆற்றலை வழங்குவதுடன் உடல்நலனையும் மேம்படுத்துகிறது. ஆதலால்தான் இதனை நம் முன்னோர்கள் விரத வழிபாட்டில் பயன்படுத்தியுள்ளனர்.
Continue reading “கொண்டைக்கடலை – புரதம் கொழிக்கும் கடவுளின் உணவு”
நிலக்கடலை – நினைவாற்றலின் மறுபெயர்
நிலக்கடலை என்றவுடன் அதனுடைய சுவையும், மணமும் நினைவிற்கு வரும்.
என்னுடைய சிறுவயதில் நிலக்கடலைக் காட்டிற்கு கடலை எடுக்கும் சமயத்தில் சென்றுள்ளேன். அதனை வேருடன் பிடுங்கி உதிர்த்து சுட்டு உண்ட சுவை இன்னும் என் நினைவில் இருக்கிறது.
அவ்வளவு அட்டகாசமான நிலக்கடலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பாசி பயறு – அழகு தரும் ஆரோக்கியம் தரும்
பாசி பயறு என்றவுடன் நாம் சருமம் மற்றும் கேசப் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே நினைவிற்கு வரும்.
ஆனால் அது உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதே நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. எனவே இது உணவே மருந்தான பொருளாகும். Continue reading “பாசி பயறு – அழகு தரும் ஆரோக்கியம் தரும்”
உளுந்து உங்களைக் காக்கும்
உளுந்து உங்களைக் காக்கும். ஆதலால்தான் நம்முடைய முன்னோர்கள் இட்லி, தோசை, வடை, அப்பளம், களி, கஞ்சி என பலவடிவங்களில் உணவுகளை உளுந்தில் தயார் செய்து உண்ண நம்மைப் பழக்கியுள்ளனர்.
உளுந்து பயறு, பருப்பு என இரு வடிவங்களில் நம்மால் பயன்படுத்தப்படுகிறது.