மீக்குளிர் நீர்- நீருடன் ஓர் உரையாடல் – 21

மீக்குளிர் நீர்

‘இன்று மாடி மற்றும் படிகட்டுகள் அனைத்தையும் சுத்தம் செய்துவிட வேண்டும்’ என்று முடிவு செய்தேன். வேறு சில வேலைகளின் நிமித்தம், தூய்மை பணியை தொடங்குவதில் சற்று தாமதம் ஆயிற்று.

அப்பொழுது மணி, கிட்டத்தட்ட பகல் 12.30 இருக்கும்.

“வெயில்லையா மொட்ட மாடிய கழுவ போற?” என்று அப்பா கேட்டார்.

Continue reading “மீக்குளிர் நீர்- நீருடன் ஓர் உரையாடல் – 21”

பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20

பொதுக் கரைப்பான்- நீருடன் ஓர் உரையாடல்- 20

சில எலுமிச்சை பழங்கள் இருந்தன. அவற்றுள் இரண்டு மிகவும் பழுத்திருந்தன. ஆங்காங்கே பழுப்பு நிறத்தில் புள்ளிகளும் இருந்தன. அப்படியே வைத்திருந்தால், அவை அழுகிவிடும்.

“என்ன செய்யலாம், எலுமிச்சை சாதம் செய்யலாமா?” என்று யோசித்தேன். ஆனால், காலையில் சமைத்திருந்த சாம்பார் அதிகமாகவே இருக்கிறது. ‘சாம்பார் வீணாயிடுமே?’ என்றும் தோன்றியது.

‘சரி சாறு போட்டிடலாம்’ என்று முடிவு செய்தேன்.

Continue reading “பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20”

நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19

நீரின் ஒட்டுந்தன்மை - நீருடன் ஓர் உரையாடல் - 19

அதிகாலை பொழுது. சுமார் ஆறு மணி இருக்கும். மாடிக்கு வந்தேன்.

காலநிலை குளிர்ச்சியாக இருந்தது. சூரியக் கதிர்கள் இன்னமும் பூமியை வந்தடையவில்லை. ஆனால் வெளிச்சம் இருந்தது.

அங்கிருந்த பூச்செடிகளை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். செடியின் இலைகளில் நீர்த்திவலைகள் ஆங்காங்கே இருந்தன. அவற்றை உற்றுப் பார்த்தேன்.

ஒரு இலையின் முனையில் கோள வடிவில் நீர் துளி ஒன்று ஒட்டியபடி, புவி ஈர்ப்புவிசையை எதிர்த்து கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தது. இயற்கையின் இந்த நுட்பமான அறிவியலை எண்ணி வியந்தேன்.

அப்பொழுது நீருடன் பேச விரும்பினேன். பேச்சை நாமே தொடங்குவோமே என்று தேன்றியது.

உடனே “பாத்து… பத்திரம்… இலையில இருந்து கீழ விழுந்திடப் போற‌” என்று அந்த நீர்த்திவலையைப் பார்த்துக் கூறினேன்.

Continue reading “நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19”

அயனிமம் கிளர்வுற்ற நீர்- நீருடன் ஓர் உரையாடல் -18

அயனிமம் கிளர்வுற்ற நீர்

தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி சில நாட்கள் ஆகிவிட்டன. வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்திற்கு விரைந்து சென்றேன். நல்ல வேளையாக எந்த தாவரமும் வாடிப் போகவில்லை.

மனம் அமைதியடைந்தது.

தண்ணீர் குழாயில் பிளாஸ்டிக் நெடுங்குழாயை மாட்டினேன். தண்ணீர் குழாயைத் திறக்க, நீர் பிளாஸ்டிக் நெடுங்குழாய் வழியே பீறிட்டு வந்தது.

அதில் வந்த நீரை முதலில் தொட்டிகளில் இருந்த பூச்செடிகளுக்கு பாய்ச்சினேன். அவை அசைந்தன. ‘நீர் கிடைத்ததால் அவை மகிழ்ந்து சிரித்தனவோ?’ என்று மனதில் தோன்றியது.

Continue reading “அயனிமம் கிளர்வுற்ற நீர்- நீருடன் ஓர் உரையாடல் -18”

நீரின் சுவை – நீருடன் ஓர் உரையாடல் – 17

நீரின் சுவை - நீருடன் ஓர் உரையாடல் - 17

மூன்று நாட்களுக்கு முன்பு, மாமாவும் அக்காவும் வீட்டிற்கு வந்து சென்றனர். கூடவே, ஒரு பெரிய பை நிறைய மாங்காய்களையும் கொண்டு வந்திருந்தனர். அவை எல்லாம் அவர்களது வீட்டில் இருந்த மாங்காய் மரத்தில் காய்த்தவை.

“வீணா போயிடப் போகுது. ஊறுகாயாவது செய்யுங்க” என்று அப்பா அந்த மாங்காய்கள் குறித்து அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கோ மாங்காய் ஊறுகாய் செய்வதில் அந்த அளவு ஆர்வமில்லை. ‘அவ்வளவு மாங்காய்களையும் என்ன செய்யலாம்’ என்று யோசித்தேன்.

அப்பொழுது ஒருமுறை ‘உலர் இனிப்பு மாங்காய் துண்டுகளை’ நண்பன் எனக்கு தந்தது நினைவிற்கு வந்தது. ‘சரி அதையே செய்திடலாம்’ என்று முடிவு செய்தேன்.

Continue reading “நீரின் சுவை – நீருடன் ஓர் உரையாடல் – 17”