அதிகாலை பொழுது. சுமார் ஆறு மணி இருக்கும். மாடிக்கு வந்தேன்.
காலநிலை குளிர்ச்சியாக இருந்தது. சூரியக் கதிர்கள் இன்னமும் பூமியை வந்தடையவில்லை. ஆனால் வெளிச்சம் இருந்தது.
அங்கிருந்த பூச்செடிகளை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். செடியின் இலைகளில் நீர்த்திவலைகள் ஆங்காங்கே இருந்தன. அவற்றை உற்றுப் பார்த்தேன்.
ஒரு இலையின் முனையில் கோள வடிவில் நீர் துளி ஒன்று ஒட்டியபடி, புவி ஈர்ப்புவிசையை எதிர்த்து கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தது. இயற்கையின் இந்த நுட்பமான அறிவியலை எண்ணி வியந்தேன்.
அப்பொழுது நீருடன் பேச விரும்பினேன். பேச்சை நாமே தொடங்குவோமே என்று தேன்றியது.
உடனே “பாத்து… பத்திரம்… இலையில இருந்து கீழ விழுந்திடப் போற” என்று அந்த நீர்த்திவலையைப் பார்த்துக் கூறினேன்.
Continue reading “நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19”