இழப்பு – எம்.மனோஜ் குமார்

இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான் வாசுதேவன். அவனது அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். அழைத்தது அவனது மனைவி.

Continue reading “இழப்பு – எம்.மனோஜ் குமார்”

முயல் குட்டியின் தந்திரம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

ஒரு காட்டில் ஒரு முயல் குட்டி தன் தாயுடன் சேர்ந்து இரை தேடிக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக வந்த வனத்துறை ஊழியர்களின் ஜீப்பிலிருந்து ஏதோ ஒன்று தவறி விழுவதைக் கண்டது முயல் குட்டி.

Continue reading “முயல் குட்டியின் தந்திரம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

சில்லறை – எம்.மனோஜ் குமார்

பூவிருந்தமல்லியிலிருந்து திருவள்ளூர் செல்லும் பஸ்ஸில் திருவள்ளூருக்கு பயணச்சீட்டு கேட்டான் ராஜா.

Continue reading “சில்லறை – எம்.மனோஜ் குமார்”

லீவு – எம்.மனோஜ் குமார்

“ஏன்யா அடிக்கடி ஆபீஸ்க்கு லீவு போடுற? நீ லீவு போடுறதுனால எவ்வளவு வேலை கெட்டுப் போகுது தெரியுமா?” மேலதிகாரி வாசுதேவன் அரவிந்தை திட்டினார்.

“சார்! எனக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு. அதனால ராத்திரியானா தண்ணி அடிக்கிறேன். விடிஞ்சா ஒரே தலைவலி. அதான் லீவு போடுறேன்.” எந்த கூச்சமும் இல்லாமல் சொன்ன அரவிந்தை, மேலும் கீழும் பார்த்தார் வாசுதேவன்.

Continue reading “லீவு – எம்.மனோஜ் குமார்”

மாமியாரும் மருமகளும்

மலையனூர் என்ற ஊரில் ஒரு மாமியாரும் மருமகளும் இருந்தார்கள். மருமகள் மிகவும் சோம்பேறி. அதோடு அவளின் செயல்பாடு மிகவும் மந்தமாகவே இருந்தது. அவளுக்கு உலக அறிவு மிகவும் குறைவாகவே இருந்தது.

பிறர் சொல்லும் விஷயங்களை சீர்தூக்கிப் பார்த்துச் சரியாக செய்யும் பழக்கம் அவளுக்கு அறவே இல்லை. இந்த நிலையில் அவளுடைய காது கேட்கும் சக்தியும் சற்று மந்தம்.

Continue reading “மாமியாரும் மருமகளும்”