மனிதன் என்னும் பேய்க்கூட்டம்

இயற்கையின் இன்ப சரித்திரத்தில்
பூமியும் ஒன்று

அது அண்டத்தின் அழகான திருவுருவம்
ஆற்றல் நிரம்பிய பேருருவம்

Continue reading “மனிதன் என்னும் பேய்க்கூட்டம்”

சப்தமும் இரைச்சலும் – ஓர் பார்வை

சப்தமும் இரைச்சலும்

மனிதன் இன்று இரைச்சலும் சப்தமும் சூழ்ந்த சூழ்நிலைக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எங்கு காணினும் சப்தம், இரைச்சல்.

பொழுது புலர்ந்தது முதல் தலைதூக்கும் இந்த பிரச்சனை, நாள் முழுக்கத் தொடர்ந்து இரவு ஆகியும் தீராமல் மனித வர்க்கத்தை ஆட்டிப் படைக்கிறது.

இரண்டு சக்கர வாகனங்ககள் முதல் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், பேருந்து, ரேடியோ, டி.வி., தொழிற்சாலை யந்திரங்கள், ரயில், மைக் மூலம் ஏற்படுத்தப்படும் சப்தம் என பல்வேறு வகைகள் மூலம் சப்தத்தின் இம்சை தாங்க முடியாமல் நாம் அன்றாடம் தவித்து வருகிறோம். இதுவே ஒலி மாசுபாடு ஆகும்.

Continue reading “சப்தமும் இரைச்சலும் – ஓர் பார்வை”

எது நம் தேர்வு?

இயற்கை நம் முன் இரண்டு வாய்ப்புக்களை வைக்கின்றது.

ஒன்று மாசு படாத இயற்கையான பூமி

அடுத்தது மாசுபட்ட‌ வாழத் தகுதியற்ற பூமி

எது நம் தேர்வு? நீ யோசி!

கூவம் ஆறு – ஓர் பார்வை

கூவம் ‍ஆறு - ஓர் பார்வை

கூவம் ஆறு பற்றி தெரியாதவர்கள் சென்னை நகரில் இருக்க மாட்டார்கள். சென்னைக்கு வெளியே இருப்பவர்களும் கூவம் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்.

கூவம் என்றால் என்ன?

அது பெரிய சாக்கடை என்றே பலர் நினைக்கிறோம்.

அது ஒரு புனித நதி என்றால் நம்புவீர்களா?

அதுதான் உண்மை. கூவம் ஆறு பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

சென்னை நகரில் இருப்போர் கூவம் ஆறு பற்றி அறிவார்கள். ஆனால் கொசஸ்தலை ஆற்றை அறிந்திருக்க மாட்டார்கள்.

நாம் கூவம் ஆறு என்ற தலைப்பில் இரண்டு நதியையும் பற்றி பார்ப்போம்.

காரணம் இன்றைய நிலையில் கொசஸ்தலை ஆறு சென்னைக்கு நீர் கொடுக்கின்றது. கூவம் சென்னைக்கு நீர் கொடுக்கவும் செய்கின்றது; சென்னை மாநகரத்திலிருந்து கழிவுகளைக் கொண்டும் போகின்றது.

Continue reading “கூவம் ஆறு – ஓர் பார்வை”

இயற்கைச் சூழல் – எப்படி இருக்கிறது? எப்படி இருந்தது?

அன்றைய இயற்கைச் சூழல் எப்படி இருந்தது?

இயற்கைச் சூழல் முற்காலத்தில் எப்படி இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இக்காலத்தில் இயற்கைச் சூழலின் நிலையை நாம் அறிவோம். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து இனி வருங்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும்.

காலத்தின் கோலம், போலி நாகரீக மோகம், பண்பாடு மற்றும் கலாசார சீரழிவுகளால் நம் பாரத நாட்டில் இயற்கை சூழல் கெட்டது. நாம் கெடுத்தோம்.

எப்படிப்பட்ட சூழலில் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதை, நம் மொழியால், வளர்ந்த இலக்கியத்தால் அறியலாம்.

Continue reading “இயற்கைச் சூழல் – எப்படி இருக்கிறது? எப்படி இருந்தது?”